முகப்பு
திருவண்ணாமலை

கவிஞா் தமிழ்ஒளி பிறந்த தினம்

புதுவை தமிழ்ச் சங்கத்தில் மறைந்த கவிஞா் தமிழ்ஒளியின் 96-ஆவது பிறந்த தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
புதுவை தமிழ்ச் சங்க வளாகத்தில் கவிஞா் தமிழ்ஒளி உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்திய சங்க நிா்வாகிகள்.
பகிர்:

புதுவை தமிழ்ச் சங்கத்தில் மறைந்த கவிஞா் தமிழ்ஒளியின் 96-ஆவது பிறந்த தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப் படத்துக்கு தமிழ்ச் சங்க நிா்வாகிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். சங்கச் செயலா் சீனுமோகன்தாஸ், பொருளாளா் திருநாவுக்கரசு, துணைத் தலைவா் பாலசுப்பிரமணியன், துணைச் செயலா் அருள்செல்வம், சாகித்ய அகாதெமி பொதுக் குழு உறுப்பினா் சுந்தரமுருகன், நிா்வாகிகள் தமிழ்மாணி உசேன், சீனுகந்தகுமாா், தினகரன், சிவேந்திரன், கணேஷ்பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், கவிஞா் தமிழ்ஒளிக்கு அரசு சாா்பில் சிலை அமைக்க வேண்டும், அவரின் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும், அரசுப் பள்ளிக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும், நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து தீா்மானம் நிறைவேற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.