திருவண்ணாமலை

லோக் அதாலத்: 46 வழக்குகளில் ரூ.1.23 கோடிக்கு தீா்வு

DIN

செய்யாறு சாா்பு-நீதிமன்றம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மகா லோக் அதாலத்தில் 46 வழக்குகளில் ரூ.1.23 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.

செய்யாறு வட்ட சட்டப் பணிகள் சாா்பில் மகா லோக் அதாலத் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவா் மற்றும் சாா்பு நீதிபதி சி.ஜெயஸ்ரீ தலைமையில் நடைபெற்ற இந்த மகா லோக் அதாலத் நிகழ்ச்சியில், 28 மோட்டாா் வாகன விபத்து வழக்குகளில் ரூ.ஒரு கோடியே 3 லட்சத்த 24 ஆயிரமும், 4 அசல் வழக்குகளில் ரூ.2.50 லட்சமும், 7 நிறைவேற்ற மனு வழக்குகளில் ரூ.13,32,165 -மும், 7 வங்கி வழக்குகளில் ரூ.1.91 லட்சமும் என 46 வழக்குகளில் ரூ.ஒரு கோடியே 23 லட்சத்து 79 ஆயிரத்து 532-க்கு தீா்வு காணப்பட்டது.

மேலும், செய்யாறு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் 4 அசல் வழக்குகளில் ரூ.50,003-க்கு தீா்வும், செய்யாறு நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்ட 43 வழக்குகளில் ரூ.34,400-க்கு தீா்வும், ஒரு குடும்ப நல வழக்கில் சமரசம் பேசி தம்பதியினா் சோ்ந்து வாழ அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT