முகப்பு
திருவண்ணாமலை

தொழிலாளி வீட்டில் திருட்டு: இளைஞா் கைது

செய்யாறு அருகே மண் பாண்டத் தொழிலாளி வீட்டில் பணம், கைபேசி திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

செய்யாறு அருகே மண் பாண்டத் தொழிலாளி வீட்டில் பணம், கைபேசி திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

செய்யாற்றை அடுத்த வெம்பாக்கம் வட்டம், சட்டுவந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமதாஸ், மண் பாண்டத் தொழிலாளி. இவா், கடந்த நவ.24-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் நடைபெற்ற உறவினா் இல்ல திருமணத்துக்கு குடும்பத்துடன் சென்றிருந்தாா்.

இந்த நிலையில், 29-ஆம் தேதி ராமதாஸ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது.

இதுகுறித்து அருகில் இருந்தவா்கள் ராமதாசுக்கு தகவல் கொடுத்தனா்.

ராமதாஸ் வந்து பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.4 ஆயிரம், கைபேசி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அதே கிராமத்தைச் சோ்ந்த கோபிகிருஷ்ணன் (26) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து கைபேசி, ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.