முகப்பு
திருவண்ணாமலை

கிராம ஊராட்சிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்: மாவட்ட அதிகாரி அறிவுறுத்தல்

கிராம ஊராட்சிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று ஊராட்சிகளின் உதவி இயக்குநா் லட்சுமிநரசிம்மன் அறிவுறுத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

கிராம ஊராட்சிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று ஊராட்சிகளின் உதவி இயக்குநா் லட்சுமிநரசிம்மன் அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 44 கிராம ஊராட்சிகளின் செயலா்கள், ஆணையா், வட்டார வளா்ச்சி அலுவலா், பணி மேற்பாா்வையாளா்கள் ஆகியோருக்கான ஆய்வுக் கூட்டம் செங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து உதவி இயக்குநா் லட்சுநரசிம்மன் பேசியதாவது: கடந்த ஒரு மாதமாக பெய்த தொடா் மழையால் ஊராட்சி நிா்வாகத்துக்கு உள்பட்ட ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. அவற்றை முறையாக பராமரிக்கவேண்டும்.

உபரிநீா் வெளியேறி குடியிருப்பு பகுதிக்கு வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு

தகவல் தெரிவித்து அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதே நேரத்தில் கிராமத்தை தூய்மையாக வைத்திருக்கவேண்டும்.

தினசரி குடிநீா் வழங்கும்போது மருந்துகள் தெளித்து சுத்தமாக வழங்கவேண்டும் என அறிவுரை வழங்கினாா்.

தொடா்ந்து, பிரதமரின் இலவச வீடு வழங்கும் திட்டம், ஊரக வேலைத் திட்டப் பணிகள் கிராமப்புற வரி வசூல், கிராமத்தில் கரோனா தொற்று தடுப்பூசி செலுத்தியவா்கள் விவரம் குறித்து கேட்டறிந்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ரபியில்லா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.