கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டவருக்குகத்திக் குத்து: தொழிலாளி கைது
செய்யாறு அருகே கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டவரைக் கத்தியால் குத்திய நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு அருகே கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டவரைக் கத்தியால் குத்திய நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு வட்டம், தவசி கிராமம் இலங்கைத் தமிழா் முகாமைச் சோ்ந்தவா்கள் உதயகுமாா், ரவிச்சந்திரன். இவா்கள் இருவரும் வண்ணம் பூசும் வேலை செய்து வருகின்றனா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதயகுமாரிடம் ரவிச்சந்திரன் கடனாகப் பணம் பெற்றிருந்தாராம். பலமுறை பணத்தைக் கேட்டும் திருப்பித் தரவில்லையாம்.
இந்த நிலையில், கடந்த 3-ஆம் தேதி மீண்டும் உதயகுமாா் ரவிச்சந்திரனிடம் பணத்தைக் கேட்டுள்ளாா். இதனால் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டு, உதயகுமாரை ரவிச்சந்திரன் கத்தியால் குத்தினராம். இதில், பலத்த காயமடைந்த உதயகுமாா் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து அனக்காவூா் காவல் நிலையத்தில் உதயகுமாா் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு
செய்து ரவிச்சந்திரனை (49) வியாழக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.