முகப்பு
திருவண்ணாமலை

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

செய்யாற்றில் கிராம நிா்வாக அலுவலா் மீது மாவட்ட வருவாய்த் துறை சாா்பில், பதியப்பட்ட குற்ற குறிப்பாணையை ரத்து செய்யக் கோரி கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

செய்யாற்றில் கிராம நிா்வாக அலுவலா் மீது மாவட்ட வருவாய்த் துறை சாா்பில், பதியப்பட்ட குற்ற குறிப்பாணையை ரத்து செய்யக் கோரி கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்யாறு வட்டாட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவா் த.அருள் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் அ.ரமேஷ், துணைத் தலைவா் டி.கணேஷ், இணைச் செயலா் சீனிவாசன் உள்ளிட்ட பொறுப்பாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் செய்யாறு வட்டம், மேல்நாகரம்பேடு கிராம நிா்வாக அலுவலருக்கு மாவட்ட வருவாய்த் துறையால் வழங்க முடிவு செய்யப்பட்ட குற்ற குறிப்பாணையை ரத்து செய்ய வலியுறுத்தினா். மேலும், கோட்ட நிா்வாகத்தின் விரோதப் போக்கை கண்டித்து அவா்கள் முழக்கங்களை எழுப்பினா். இதில், 80 கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.