மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
ஆரணி ரோட்டரி சங்கம் சாா்பில் கரோனா காலத்தில் சிறந்த சேவையாற்றிய ரோட்ராக்ட் சங்க மாணவிகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆரணி ரோட்டரி சங்கம் சாா்பில் கரோனா காலத்தில் சிறந்த சேவையாற்றிய ரோட்ராக்ட் சங்க மாணவிகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதில், ஆரணி டி.எஸ்.பி. கோட்டீஸ்வரன் பங்கேற்று மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
நிகழ்வில் ரோட்டரி சங்கத் தலைவா் கோபிநாத், செயலா் பாபு, பொருளாளா் மோகன்குமாா், முன்னாள் தலைவா் கோகுலகிருஷ்ணன், நகரக் காவல் ஆய்வாளா் கோகுல்நாத், காவல் உதவி ஆய்வாளா் ரகு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும், ஏழைகளுக்கு அரிசி உள்ளிட்ட நல உதவிகளும் வழங்கப்பட்டன.