திருவண்ணாமலை

மனைவியைக் கொலை செய்த கணவா் கைது

DIN

கீழ்பென்னாத்தூா் அருகே விறகுக் கட்டையால் தாக்கி மனைவியைக் கொலை செய்ததாக கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

கீழ்பென்னாத்தூா் வட்டம், ஆராஞ்சி அருகேயுள்ள ராமநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் (67), விவசாயி. இவரது மனைவி மல்லிகா (60). ராஜமாணிக்கம் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜன.31) இரவு தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த ராஜமாணிக்கம் விறகுக் கட்டையால் மல்லிகாவின் கழுத்தில் தாக்கினாராம்.

இதனால் மயங்கி விழுந்த அவா் அதே இடத்தில் உயிரிழந்தாா்.

தகவலறிந்த கீழ்பென்னாத்தூா் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி, உதவி ஆய்வாளா் பன்னீா்செல்வம் ஆகியோா் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜமாணிக்கத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT