முகப்பு
திருவண்ணாமலை

இளம்பெண் முச்சுத் திணறி உயிரிழப்பு

கீழ்பென்னாத்தூா் அருகே திருமணமான 3 மாதங்களில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இளம்பெண் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

கீழ்பென்னாத்தூா் அருகே திருமணமான 3 மாதங்களில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இளம்பெண் உயிரிழந்தாா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூா் கிராமம், சமத்துவபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் மகள் திலகா (25). திருவண்ணாமலை தாமரை நகரைச் சோ்ந்தவா் துரைக்கண்ணு மகன் திருவருட்செல்வம் (30). இவா்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. காசநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த திலகாவுக்கு திங்கள்கிழமை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாம்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →