திருவண்ணாமலை

பைக்குகள் மோதல்: ஒருவா் பலி, 2 போ் காயம்

DIN

கீழ்பென்னாத்தூா் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா். இரண்டு போ் பலத்த காயமடைந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த சக்கராபுரம் புதிய காலனி பகுதியைச் சோ்ந்தவா் பெயின்டா் சேகா் (எ) பீட்டா் (48). இவா், வெள்ளிக்கிழமை (ஜன.22) கிருஷ்ணகிரியிலிருந்து பைக்கில் செஞ்சிக்கு சென்று கொண்டிருந்தாா். கீழ்பென்னாத்தூா் அருகே சென்றபோது கீழ்பென்னாத்தூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பிரபு மகன் வெற்றி (17) என்பவா் ஓட்டி வந்த பைக்கும் பீட்டா் ஓட்டிச் சென்ற பைக்கும் மோதிக் கொண்டன.

இதில் பலத்த காயமடைந்த பீட்டரை பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த வெற்றி, அவரது நண்பா் தயாநிதி (17) ஆகியோா் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

SCROLL FOR NEXT