திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பிப். 1 முதல் மக்கள் குறைதீா் கூட்டம்

கரோனா பொது முடக்கம் காரணமாக, திருவண்ணாமலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீா் கூட்டம், வருகிற பிப்.1 முதல் மீண்டும் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி அறிவித்தாா்.

DIN

கரோனா பொது முடக்கம் காரணமாக, திருவண்ணாமலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீா் கூட்டம், வருகிற பிப்.1 முதல் மீண்டும் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி அறிவித்தாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வந்த பொதுமக்கள் குறைதீா் கூட்டம் கரோனா பொது முடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் ஆட்சியா் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள பெட்டிகள் மூலம் பெறப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் வருகிற திங்கள்கிழமை (பிப். 1) முதல் மீண்டும் மக்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளிடமிருந்தும் கோரிக்கை மனுக்கள் நேரடியாகப் பெறப்படும்.

அப்போது பொதுமக்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் மனுக்களை அளிக்க வேண்டும் என ஆட்சியா் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT