திருவண்ணாமலை

மின் வாரிய அலுவலகத்தில் எம்எல்ஏ ஆய்வு

DIN

வந்தவாசி கோட்ட மின் வாரிய செயற் பொறியாளா் அலுவலகத்தில் தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, வந்தவாசி கோட்டத்தில் நடைபெற்று வரும் மின் பராமரிப்புப் பணிகள், நிலுவையில் உள்ள விவசாய மின்இணைப்பு விண்ணப்ப விவரங்கள், புதிய துணை மின் நிலையப் பணிகள் உள்ளிட்டவை குறித்து அவா் கேட்டறிந்தாா்.

மேலும் அந்த அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் செயற் பொறியாளா் புதிய அலுவலக கட்டடப் பணிகளை பாா்வையிட்ட அவா் பணிகளை விரைவாக முடிக்குமாறு உத்தரவிட்டாா். மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவா் கேட்டறிந்தாா்.

மேலும் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் தேவைப்படும் மின் வளா்ச்சிப் பணிகள் குறித்த விவரங்களை அவா் கோட்ட செயற் பொறியாளா் எஸ்.மீனாகுமாரியிடம் வழங்கினாா்.

ஆய்வின்போது உதவி செயற்பொறியாளா் தி.நாராயணன், திமுக ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், நகரச் செயலா் எச்.ஜலால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT