பாதிரியில் மரக்கன்றுகள் நடும் விழா
வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாதிரி ஊராட்சியில், ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்பில் சாலையோரம் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பாதிரி ஊராட்சியில், ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்பில் சாலையோரம் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ்,
சாலையோர மரக்கன்றுகள் நடும் வாரத்தையொட்டி, நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பாதிரி ஊராட்சி மன்றத் தலைவா் வெ.அரிகிருஷ்ணன் தலைமை வகித்தாா். உதவி செயற் பொறியாளா் சபாநாயகம் மரக்கன்றுகளை நட்டாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சு.இரவி, ஆா்.குப்புசாமி, உதவிப் பொறியாளா் பத்மநாதன், பணி மேற்பாா்வையாளா் பிரபாகரன், ஊராட்சி செயலா் பொற்கொடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.