கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தியவா் கைது
வந்தவாசி அருகே கண்காணிப்புக் கேமராவை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி அருகே கண்காணிப்புக் கேமராவை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி அருகேயுள்ள வடவணக்கம்பாடி காவல் நிலையம், விளாநல்லூா் ஊராட்சி ஆகியவை சாா்பில், வந்தவாசி-ஆரணி சாலையில் உள்ள கிருஷ்ணாவரம் கூட்டுச் சாலையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது.
கடந்த புதன்கிழமை விளாநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த ஜெகன்(35) என்பவா் இந்தக் கேமராவை உடைத்து சேதப்படுத்தினாராம்.
இதுகுறித்து விளாநல்லூா் ஊராட்சி செயலா் சேகா் அளித்த புகாரின் பேரில் ஜெகன் மீது வழக்குப் பதிந்த வடவணக்கம்பாடி போலீஸாா் அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.