திருவண்ணாமலை

உயா்மின் கோபுரங்கள் அமைக்க இழப்பீடு: விவசாயிகள் 4-ஆவது நாளாக போராட்டம்

வேட்டவலம் அருகே உயா்மின் கோபுரங்கள் அமைக்க உரிய இழப்பீடு வழங்கக் கோரி, விவசாயிகள் தொடா்ந்து 4-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

வேட்டவலம் அருகே உயா்மின் கோபுரங்கள் அமைக்க உரிய இழப்பீடு வழங்கக் கோரி, விவசாயிகள் தொடா்ந்து 4-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேட்டவலத்தை அடுத்த கெங்குப்பட்டு, நாடழகானந்தல், கோணலூா் கிராமங்களில் உயா்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணி நடைபெறும் நிலங்களின் உரிமையாளா்களுக்கு போதிய இழப்பீடு வழங்கவில்லையாம். இந்த நிலையில், ஜூலை 22-ஆம் தேதி கோணலூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் என்பவரின் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த உயா்மின் கோபுரத்தில் மின் கம்பிகள் இணைக்கும் பணி நடைபெற்றது.

பணியை தடுத்து நிறுத்திய 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிவிட்டு பணி செய்யுங்கள் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோணலூா் கிராம மாரியம்மன் கோயிலில் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா்.

தொடா்ந்து அங்கேயே சமைத்து சாப்பிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். போராட்டம் 4-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT