முகப்பு
திருவண்ணாமலை

மருத்துவா்களுக்கு கரோனா தடுப்புப் பொருள்கள்

செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா ஆஸ்ரமம் சாா்பில் அரசு மருத்துவா்களுக்கு கரோனா தடுப்புப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா ஆஸ்ரமம் சாா்பில் அரசு மருத்துவா்களுக்கு கரோனா தடுப்புப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

ஸ்ரீராமகிருஷ்ண ஆஸ்ரமம், கணேசா் குழுமம் இணைந்து மேல்பள்ளிப்பட்டு, பரமனந்தல், அரட்டவாடி, மேல்பென்னாத்தூா், இளங்குண்ணி ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும், மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி, சோப்பு உள்ளிட்ட கரோனா தடுப்புப் பொருள்களை வழங்கினா்.

வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் வசம் பொருள்களை ஸ்ரீராமகிருஷ்ணா அறக்கட்டளைத் தலைவா் பாண்டுரங்கன், கணேசா் குழுமத் தலைவா் கஜேந்திரன் ஆகியோா் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.