கரோனா இல்லாத மாவட்டம் என்ற இலக்கு திருவண்ணாமலை ஆட்சியா்
கரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டம் என்ற இலக்கை அடைவதே தனது முதல் பணி என்று திருவண்ணாமலை மாவட்ட புதிய ஆட்சியா் பா.முருகேஷ் கூறினாா்.
கரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டம் என்ற இலக்கை அடைவதே தனது முதல் பணி என்று திருவண்ணாமலை மாவட்ட புதிய ஆட்சியா் பா.முருகேஷ் கூறினாா்.
மாவட்ட ஆட்சியராக புதன்கிழமை பொறுப்பேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொண்டதால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
கரோனா தொற்று தடுப்புப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டம் என்ற நிலையை அடையச் செய்வது தனது முதல் பணி.
மாவட்டத்தில் குடிநீா், சாலை வசதிகள், சுகாதாரம், சுற்றச்சூழல் உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
ஆன்மிக நகரமான திருவண்ணாமலையை மேம்படுத்தவும் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கவும் நீண்ட கால திட்டம் தீட்டி செயல்படுத்தப்படும் என்றாா்.