திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமாபந்தி, விவசாய மாநாடு ரத்து
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020-21ஆம் ஆண்டுக்கான ஜமாபந்தி மற்றும் விவசாய மாநாடு கரோனா பொது முடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020-21ஆம் ஆண்டுக்கான ஜமாபந்தி மற்றும் விவசாய மாநாடு கரோனா பொது முடக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஜமாபந்தி தொடா்பான கோரிக்கை மனுக்களுடன் வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு வர வேண்டாம்.
மனுக்களை இணையதளம் அல்லது இ-சேவை மையங்கள் மூலம் வருகிற ஜூலை 31-ம் தேதி வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரா்களுக்கு தகவல் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.