அனக்காவூா் ஒன்றியக் குழுக் கூட்டம்
செய்யாறு வட்டம், அனக்காவூா் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம், ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
செய்யாறு வட்டம், அனக்காவூா் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம், ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அருணாதுரை, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மூா்த்தி, ஹரிஹரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
உறுப்பினா்கள், ஒன்றிய அலுவலா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் வடஆளப்பிறந்தான் கிராம ஊராட்சியில் ரூ.14 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பொது நிதியிலிருந்து கட்டுதல் உள்ளிட்ட 20 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.