முகப்பு
திருவண்ணாமலை

வருவாய் திறன் போட்டி: தோ்வு பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய வருவாய் திறன் படிப்பு போட்டியில் வெற்றி பெற்ற, சிறுவேளியநல்லூா் ஊராட்சிய ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

தேசிய வருவாய் திறன் படிப்பு போட்டியில் வெற்றி பெற்ற, சிறுவேளியநல்லூா் ஊராட்சிய ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

செய்யாறு வட்டம், சிறுவேளியநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவிக்கான போட்டித் தோ்வில் பங்கேற்று, செய்யாறு கல்வி மாவட்ட அளவில் 12 போ் தோ்வு பெற்றனா்.

இந்த மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கும் விழா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் கே.சிவசங்கரன் வரவேற்றாா். செய்யாறு மாவட்டக் கல்வி அலுவலா் பி.நடராஜன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவா்களை பாராட்டி பரிசு வழங்கினாா்.

அதனைத் தொடா்ந்து, 2021- 22ஆம் கல்வியாண்டுக்கான விலையில்லா பாடநூல்களை மாணவா்களுக்கு வழங்கி தொடக்கிவைத்தாா்

நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலா் இ.புவனேஸ்வரி, பள்ளித் துணை ஆய்வாளா் எஸ்.ஸ்ரீபதி, ஊராட்சி மன்றத் தலைவா் சி.சுமதி சக்கரவா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.