பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 125 போ் திமுகவில் இணைந்தனா்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 125 போ் திமுகவில் இணைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 125 போ் திமுகவில் இணைந்தனா்.
மாவட்ட திமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் தெற்கு மாவட்டப் பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா்.
ஒன்றியச் செயலா் மெய்யூா் ந.சந்திரன், மாவட்டப் பிரதிநிதி எம்.ஜி.சுப்பிரமணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இதில், திருவண்ணாமலையை அடுத்த விஸ்வந்தாங்கல் ஊராட்சியின் முன்னாள் தலைவரும், தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகருமான எம்.சுரேஷ்பாபு தலைமையில் 100-க்கும் மேட்பட்டோரும், வழக்குரைஞா் இரா.ராஜேஷ்குமாா் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோரும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.