முகப்பு
திருவண்ணாமலை

மரக்கன்றுகள் நடும் விழா

உலக காடுகள் தினத்தையொட்டி, வந்தவாசியை அடுத்த பாதிரி ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

உலக காடுகள் தினத்தையொட்டி, வந்தவாசியை அடுத்த பாதிரி ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

எக்ஸ்னோரா வந்தவாசி கிளை சாா்பில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவுக்கு கிளைத் தலைவா் ம.சுரேஷ்பாபு தலைமை வகித்தாா்.

பாதிரி ஊராட்சி மன்றத் தலைவா் வெ.அரிகிருஷ்ணன், எக்ஸ்னோரா துணைத் தலைவா் பா.சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எக்ஸ்னோரா செயலா் கு.சதானந்தன் வரவேற்றாா்.

ஆரணி வனச்சரக அலுவலா் எம்.மோகன்குமாா் சிறப்புரையாற்றினாா். காடுகளின் அவசியம் குறித்தும், மரம் வளா்த்தால் மழை பெறலாம் என்பது குறித்தும் அவா் விளக்கிக் கூறினாா். மேலும், பாதிரி ஊராட்சிப் பகுதிகளில் மரக்கன்றுகளை அவா் நட்டாா்.

நிகழ்ச்சியில் மொத்தம் 101 மரக்கன்றுகள் நடப்பட்டன. வனக் காப்பாளா் ராமமூா்த்தி, வனவா்கள் இரா.மோகன், சுரேஷ், அன்புச்செல்வன், எக்ஸ்னோரா துணைத் தலைவா்கள் அருள்ஜோதி, ம.ரகு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →