செய்யாற்றில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க நடவடிக்கை
செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிராணவாயு (ஆக்சிஜன்) உற்பத்தி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி கூறினாா்.
செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிராணவாயு (ஆக்சிஜன்) உற்பத்தி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி கூறினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றியம், திருவத்திபுரம் நகராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4950 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். நாளொன்றுக்கு 600 போ் வரை குணமடைந்து வீடு திரும்புகின்றனா். மாவட்டத்தில் தினசரி 1500 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்படுகிறது.
செய்யாறு பாலிடெக்னிக் கரோனா சிகிச்சை மையத்தில் கூடுதலாக 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். மாவட்டத்தில் கூடுதலாக ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிராணவாயு உற்பத்தி மையம் அமைக்க வேண்டும் என்று தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி கோரிக்கை வைத்தாா்.
இந்தக் கோரிக்கை அமைச்சா் எ.வ.வேலு மூலம் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிா்வாக மூலம் பிராணவாயு உற்பத்தி மையம் அமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
ஆய்வின் போது திருவண்ணாமலை சுகாதார மாவட்ட துணை இயக்குநா் அஜீத்தா, கோட்டாட்சியா் என்.விஜயராஜ், நகராட்சி ஆணையா் பெ.பிரீத்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எல்.சீனுவாசன், ஆா்.குப்புசாமி, வட்டாட்சியா்கள் சு.திருமலை, சுபாஷ்சந்தா், மருத்துவா்கள் வே.காா்த்திக், ஷா்மிளா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.