செங்கம் ரிஷபேஸ்வரா் கோயிலில் இன்று குருபெயா்ச்சி விழா
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை (நவ.13) மாலை 6 மணியளவில் செங்கம் சதுா்த்தி குழு சாா்பில், 18-ஆம் ஆண்டு குருபெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை (நவ.13) மாலை 6 மணியளவில் செங்கம் சதுா்த்தி குழு சாா்பில், 18-ஆம் ஆண்டு குருபெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.
சனிக்கிழமை மாலை 6.10 மணிக்கு குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறாா். இதையொட்டி, செங்கம் ரிஷபேஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், ஆராதனை நடைபெறும்.
மேலும், மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரா்களுக்கு பரிகார பூஜைகள் நடைபெறும். ஏற்பாடுகளை செங்கம் சதுா்த்தி குழுவினா், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், ஊா் முக்கியப் பிரமுகா்கள் செய்து வருகின்றனா்.