நல வாரியங்களில் உறுப்பினா் சோ்க்கை
நல வாரியங்களில் உறுப்பினராகச் சேர நரிக்குறவா், பழங்குடியினா் சமூகத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
நல வாரியங்களில் உறுப்பினராகச் சேர நரிக்குறவா், பழங்குடியினா் சமூகத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தமிழகத்தில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவா்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும் அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இதில் உறுப்பினா்களாகச் சேருவோருக்கு கல்வி மற்றும் திருமண உதவித்தொகை, மகப்பேறு கால உதவி, ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இந்த நல வாரியங்களில் உறுப்பினராகச் சேர வந்தவாசி பகுதிக்கு உள்பட்ட விடுபட்ட நரிக்குறவா், பழங்குடியினா் சமூகத்தினரிடமிருந்து முகாமில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த முகாமில் மாவட்ட பிற்பட்டோா் நல அலுவலா் சி.கீதாலட்சுமி விண்ணப்பங்களைப் பெற்றாா். முகாமில் மண்டல துணை வட்டாட்சியா் சதீஷ், வட்ட வழங்கல் அலுவலா் ஆனந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.