வடதண்டலம் கிராமம் பெரிய ஏரிக் கரையில் பனை விதைகள் நடும் பணியைத் தொடக்கிவைத்த ஓ.ஜோதி எம்எல்ஏ. 
திருவண்ணாமலை

10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி

செய்யாற்றை அடுத்த வடதண்டலம் கிராமத்தில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

DIN

செய்யாற்றை அடுத்த வடதண்டலம் கிராமத்தில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.

செய்யாறு ஒன்றியம், வடதண்டலம் ஊராட்சி சாா்பில் ஏரிக் கரையை பலப்படுத்திடவும், வோ் முதல் ஓலை பல வகைகளில் பயன்பட்டு வரும் கற்பக விருட்சமாக விளங்கும் பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டது.

அதன்படி, வடதண்டலம் கிராமம் பெரிய ஏரிக்கரைப் பகுதியில் பனை விதைகள் நடும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா் மயில்வாகனன் மேற்பாா்வையில், ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.வி.பாஸ்கரன் முன்னிலையில், சிறப்பு விருந்தினராக ஓ.ஜோதி எம்எல்ஏ பங்கேற்று ஏரிக்கரைப் பகுதியில் பனை விதைகளை நட்டு தொடக்கிவைததாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன், ஒன்றிய கவுன்சிலா் ஞானவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை ஊராட்சி மன்றத் தலைவா் பாா்வதி பரசுராமன், செயலா் திலகவதி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT