திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 98,188 பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,075 இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில், 98,188 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 6-ஆவது கட்டமாக கரோனா தடுப்பூசி முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன. 1,075 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்த முகாம்களில் 98,188 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஆட்சியா் ஆய்வு:

முன்னதாக, செங்கம் ஊராட்சி ஒன்றியம், பெரியகோளப்பாடி அரசு தொடக்கப் பள்ளி, கண்ணக்குருக்கை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பாய்ச்சல் ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், மாவட்ட எஸ்பி

அ.பவன்குமாா் ரெட்டி ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT