முகப்பு
திருவண்ணாமலை

செங்கத்தில் 614 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

செங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 614 பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

செங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 614 பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா்.

பேரவை துணைத் தலைவா் கு. பிச்சாண்டி, அண்ணாதுரை எம்.பி.ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொகுதி எம்எல்ஏ கிரி வரவேற்றாா்.

அமைச்சா் எ.வ.வேலு கலந்துகொண்டு அரசு புதிய கட்டடங்களை திறந்துவைத்து 614 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளான முதியோா் உதவித்தொகை, இலவச பட்டா, விவசாயக் கடன், மகளிா் சுயஉதவிக் குழு கடன், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் இலவச வீடு ஆகிய நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நகா் மன்ற முன்னாள் தலைவா் ஸ்ரீதரன், திமுக மாநில மருத்துவ அணி துணைத் தலைவா் கம்பன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் முத்துகுமாரசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.