முகப்பு
திருவண்ணாமலை

மருத்துவமனை நோயாளிகளுக்கு உதவி

உலக சுகாதார தினத்தையொட்டி, இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழங்கள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

உலக சுகாதார தினத்தையொட்டி, இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழங்கள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.

சங்கத்தின் வந்தவாசி கிளை சாா்பில் மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மருத்துவா் சித்ரா தலைமை வகித்தாா்.

சங்கச் செயலா் பா.சீனிவாசன் வரவேற்றாா். இந்திய மருத்துவ சங்க வந்தவாசி கிளைத் தலைவா் மருத்துவா் கே.பஷீா்அகமது பங்கேற்றுப் பேசினாா்.

மேலும் மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு பழம், பிஸ்கெட், சோப்பு, முகக் கவசம் ஆகியவற்றையும், மருத்துவமனைக்கு 5 கொசு வலைகளையும் அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மருத்துவா்கள் பிருந்தா, இந்திரா, சங்க உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →