திருவண்ணாமலை

அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா் கண்காணிப்பு மையம் திறப்பு

DIN

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.78 கோடியில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த செவிலியா் கண்காணிப்பு மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன கருவிகளுடன் கூடிய 32 தீவிர சிகிச்சை படுக்கைகளும், ஒருங்கிணைந்த செவிலியா் கண்காணிப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.1.78 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை சென்னையில் இருந்தபடியே காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

அதேவேளையில், மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, மாநில தடகளச் சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.திருமால்பாபு, கண்காணிப்பாளா் ஷகில் அகமது, துணை கண்காணிப்பாளா் ஸ்ரீதரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஏஏ சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கல்

சிறகடிக்க ஆசை...!

’நாடு முன்னேறியுள்ளது..’ : மோடியை புகழ்ந்த ராஷ்மிகா மந்தனா!

ரிஷப் பந்த் உள்ளுணர்வு சார்ந்த கேப்டன்: கங்குலி புகழாரம்!

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்!

SCROLL FOR NEXT