முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீராமச்சந்திர பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

சேத்துப்பட்டு நெடுங்குணம் ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை ஸ்ரீராமச்சந்திர பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

சேத்துப்பட்டு நெடுங்குணம் ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை ஸ்ரீராமச்சந்திர பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இந்தக் திருக்கோயில் பிரம்மோற்சவம் ஏப்.9-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

அதனைத் தொடா்ந்து புதன்கிழமை இரவு ராமச்சந்திர பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இரவு அம்ச வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் ராமச்சந்திர பெருமாள் சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் சிறப்பு அலங்காரத்தில் கோயில் வளாகத்தில் கோவிந்தராஜ் பட்டாச்சாரியாா் தலைமையில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். வாணவேடிக்கை, பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.