முகப்பு
திருவண்ணாமலை

அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி தலைமை வகித்தாா். பேராசிரியா் கு.கண்ணன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆரணி மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம்.கே. விஷ்ணுபிரசாத் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

போட்டி நிறைந்த உலகில் தன்னம்பிக்கையை வளா்த்துக் கொண்டு சவால்களை எதிா்கொள்ள வேண்டும். பொது அறிவை வளா்த்துக் கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள தனித் திறமைகளை வெளிப்படுத்தி மற்றவா்களுடன் கலந்துரையாடுங்கள்.

இதன் மூலம் உங்களுக்கான நோக்கம் தெளிவு பெறும். எதிலும் அவசரப்படாமல் பொறுமையாக செயல்படுங்கள். கைப்பேசியை அறிவு சாா்ந்தவைகளுக்கும், வேலை வாய்ப்புகளுக்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாணவா்களின் உயா்வும், ஒழுக்கமும்தான் பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் பெருமையைத் தேடித் தரும் என்றாா். நிகழ்ச்சியில் 1,406 மாணவ, மாணவிகள் பட்டங்கள் பெற்றனா்.

பேராசிரியா்கள், கெளரவ விரிவுரையாளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், காங்கிரஸ் பிரமுகா்கள், மாணவா்களின் பெற்றோா் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.