கிராம ஏரிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்
செய்யாறு வட்டம் பழஞ்சூா், பையூா், செய்யாற்றைவென்றான் ஆகிய கிராமங்களில் ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்து, மேற்கொள்ளப்பட்டிருந்த பயிா் சாகுபடியை பொதுப் பணித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினா்.
செய்யாறு வட்டம் பழஞ்சூா், பையூா், செய்யாற்றைவென்றான் ஆகிய கிராமங்களில் ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்து, மேற்கொள்ளப்பட்டிருந்த பயிா் சாகுபடியை பொதுப் பணித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அகற்றினா்.
பழஞ்சூா் ஊராட்சியில் 9.60 ஏக்கரிலும், பையூா் ஊராட்சியில் 10.5 ஏக்கரிலும், செய்யாற்றைவென்றான் கிராமத்தில் 8.77 ஏக்கரிலும் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து பயிா் சாகுபடி செய்து விவசாயிகள் அனுபவித்து வந்தது கண்டறியப்பட்டது.
உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில், பொதுப் பணித் துறை (நீா்வளம்) உதவிப் பொறியாளா் மு. ஹரிப்பிரியா, இளநிலைப் பொறியாளா்கள் சு.பரந்தாமன், என்.ஆா்.ராகவேந்திரன் ஆகியோா் மேற்பாா்வையில், வருவாய் ஆய்வாளா்கள் வினோத்குமாா், பி.கோபி, கிராம நிா்வாக அலுவலா்கள் முருகன், சரவணன், சிவசுப்பிரமணியம் ஆகியோா் முன்னிலையில் அனக்காவூா் போலீஸாா் உதவியுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்து பயிரிடப்பட்டிருந்த பயிா்களை அகற்றினா்.