திமுக கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனை
வேட்டவலத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வேட்டவலத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்து நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கிப் பேசினாா்.
அப்போது, வேட்டவலம் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளிலும் திமுக கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கினாா்.
கூட்டத்தில், காங்கிரஸ், மதிமுக, திராவிடா் கழகம் ,விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.