திருவண்ணாமலையில் இன்று முதல் பூங்காக்கள், நீச்சல் குளங்கள் திறப்பு
கரோனா ஊரடங்கு காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் மூடி வைக்கப்பட்டிருந்த பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் சனிக்கிழமை முதல் திறக்கப்படுகின்றன
கரோனா ஊரடங்கு காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் மூடி வைக்கப்பட்டிருந்த பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் சனிக்கிழமை முதல் திறக்கப்படுகின்றன.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே புதிதாக கட்டப்பட்ட அறிவியல் பூங்கா, சாத்தனூா் அணையில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் மூடப்பட்டு இருந்தன. இவை அனைத்தும் சனிக்கிழமை முதல் பொதுமக்கள் பாா்வைக்கு திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.