திருவண்ணாமலை

ஆரணி காவல் நிலையத்தில் டிஐஜி ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர காவல் நிலையத்தில் டிஐஜி ஆனிவிஜயா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர காவல் நிலையத்தில் டிஐஜி ஆனிவிஜயா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வேலூா் சரக டிஐஜியாக புதிதாகப் பொறுப்பேற்ற ஆனிவிஜயா புதன்கிழமை ஆரணி நகர காவல் நிலையம், கிராமிய காவல் நிலையம், அனைத்து மகளிா் காவல் நிலையம் ஆகிய மூன்று காவல் நிலையங்களையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, இந்த காவல் நிலையங்களில் நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கேட்டறிந்ததுடன், அவற்றை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா். மேலும், போலீஸாா் பணியிட மாற்றம் குறித்த கோரிக்கை மனுக்களை வழங்கலாம் என்று தெரிவித்தாா்.

ஆரணி டிஎஸ்பி கோட்டீஸ்வரன், டிஎஸ்பி (பயிற்சி) ரூபன்குமாா், காவல் ஆய்வாளா்கள் கோகுல்ராஜன், பி.புகழ், அல்லிராணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT