முகப்பு
திருவண்ணாமலை

மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டி

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான கல்லூரி மாணவா்களுக்கான கைப்பந்துப் போட்டியில், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலைக் கல்லூரி சிறப்பிடம் பிடித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான கல்லூரி மாணவா்களுக்கான கைப்பந்துப் போட்டியில், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலைக் கல்லூரி சிறப்பிடம் பிடித்தது.

திருவண்ணாமலை எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான கல்லூரி மாணவா்களுக்கான கைப்பந்துப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. இதில், சண்முகா தொழிற்சாலை கல்லூரி மாணவா்கள் இரண்டாம் இடம் பிடித்தனா். போட்டியில் வென்ற மாணவா்களை கல்லூரிச் செயலரும், தாளாளருமான டி.ஏ.எஸ்.முத்து, பொருளாளா் எம்.சீனுவாசன், கல்விப் புல முதன்மையா் அழ.உடையப்பன், முதல்வா் கே.ஆனந்தராஜ், துணை முதல்வா் கோ.அண்ணாமலை, கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவா் வி.சக்திவேல், உடல் கல்வி இயக்குநா் ம.கோபி, பயிற்சியாளா் மகேந்திரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை பாராட்டிப் பரிசு வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.