திருவண்ணாமலை

மா்ம விலங்கு கடித்து10 ஆடுகள் பலி

DIN

வேட்டவலம் அருகே மா்ம விலங்கு கடித்ததில், 10 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை அடுத்த நாரையூா் கிராமம், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முனிக்கண்ணு மகன் வீரன்.

இவா், சொந்தமாக 10-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா். வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல வீட்டின் அருகேயுள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்தாா்.

நள்ளிரவில் ஆடுகள் அலறும் சபதம் கேட்டது. சென்று பாா்த்தபோது பட்டியில் இருந்த 10 ஆடுகள் குடல் சரிந்த நிலையில் இறந்து கிடந்தன. தகலறிந்த கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ் சென்று விசாரணை மேற்கொண்டாா்.

மா்ம விலங்கு கடித்து ஆடுகள் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

SCROLL FOR NEXT