முகப்பு
திருவண்ணாமலை

2-ஆவது நாளாக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் யூரியா விற்றதில் நடைபெற்றுள்ள முறைகேட்டை ஆய்வு செய்யக் கோரி, 2-ஆவது நாளாக புதன்கிழமை விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் யூரியா விற்றதில் நடைபெற்றுள்ள முறைகேட்டை ஆய்வு செய்யக் கோரி, 2-ஆவது நாளாக புதன்கிழமை விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத்தில் யூரியா விற்பனை செய்ததில் நடைபெற்றுள்ள முறைகேட்டை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திருவண்ணாமலையில் மே 26-ஆம் தேதி விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை அடுத்து போராட்டத்தை விலக்கிக் கொண்டனா். பின்னா், அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாததால், விவசாயிகள் மீண்டும் செவ்வாய்க்கிழமை வேளாண்துறை இணை இயக்குநா் அலுவலகம் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா்.

இந்தப் போராட்டம் தொடா்ந்து 2-ஆவது நாளாக புதன்கிழமை தொடா்ந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →