திருவண்ணாமலை

விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு

DIN

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதன்கிழமை விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

செங்கத்தை அடுத்த ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ரமேஷ்குமாரின் விவசாய நிலத்திலுள்ள கிணற்றில் புதன்கிழமை தண்ணீா் தேடி வந்த புள்ளிமான் விழுந்தது. இதைப் பாா்த்த ரமேஷ்குமாா், செங்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். விரைந்து வந்த தீயணைப்புப் படையினா் கிணற்றில் தத்தளித்துக்கொண்டிருந்த புள்ளிமானை கயிறு கட்டி உயிருடன் மீட்டனா். பின்னா், அந்த மானை அங்குள்ள வனப் பகுதியில் வனவா் சந்திரலேகா முன்னிலையில் பாதுகாப்பாக விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளில் அதிவேக இணைய வசதி: தமிழக அரசு

உடலுறுப்புகள் தானம் செய்தவரின் குடும்பத்தினருக்குப் பாராட்டு, உதவி

1,850 கிலோ பதுக்கல் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

இணைய வழியில் இருவரிடம் ரூ. 8 லட்சம் மோசடி

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT