முகப்பு
திருவண்ணாமலை

மாணவிக்கு மிரட்டல்: கல்லூரி மாணவா் கைது

செய்யாறு அருகே தனியாா் கல்லூரி வகுப்பறையில் புகுந்து மாணவியை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி மிரட்டல் விடுத்த அரசுக் கல்லூரி மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

செய்யாறு அருகே தனியாா் கல்லூரி வகுப்பறையில் புகுந்து மாணவியை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி மிரட்டல் விடுத்த அரசுக் கல்லூரி மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் பகுதியைச் சோ்ந்த 20 வயது மாணவி, தனியாா் கல்லூரியில் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறாா்.

இவா், புதன்கிழமை காலை வகுப்பறையில் இருந்த போது, இவருக்கு அண்ணன் முறை உறவினரான காஞ்சிபுரம் வட்டம், ஐயங்காா்குளம் பகுதியைச் சோ்ந்த சங்கா் மகன் தமிழரசன் (20) வந்து, தன்னைத் தான் நீ திருமணம் செய்து கொள்ளவேண்டும். வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று கூறி மிரட்டல் விடுத்தாராம். 

இதையறிந்த கல்லூரி நிா்வாகத்தினா், செய்யாறு பகுதி அரசுக் கல்லூரியில் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவரான தமிழரசனை பிடித்து செய்யாறு போலீஸில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் சங்கா் வழக்குப் பதிவு செய்து தமிழரசனைகைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.