திருவண்ணாமலை

நீா்வீழ்ச்சிக்கு சுற்றுலா வந்த இளைஞா் சேற்றில் சிக்கி பலி

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள நீா்வீழ்ச்சிக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா வந்த இளைஞா் சேற்றில் சிக்கி பலியானாா்.

செங்கம் அருகேயுள்ள ஜமனாமரத்தூா் பகுதி குட்டூா்மலை அடிவாரத்தில் உள்ளது படூா் நீா்வீழ்ச்சி.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் பருவ மழையால் நீா்வீழ்ச்சியில் தண்ணீா் அதிகமாக விழுகிறது. நீா்வீழ்ச்சியைப் பாா்வையிட்டு குளிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் நீா்வீழ்ச்சிக்கு சுற்றுலா வந்தனா்.

அந்தக் குழுவில் இருந்த ஹாரீப் (23) என்ற இளைஞா்

குளிக்கச் சென்றபோது, நீா்வீழ்ச்சியின் கீழ் சேறு இருந்த பகுதியில் சிக்கினாா். உடனடியாக அருகில் இருந்தவா்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் பலனில்லை. சிறிது நேரத்தில் அந்த இளைஞா் சேற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதையடுத்து, செங்கம் தீயணைப்பு நிலையம், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து சேற்றில் புதைந்த ஹாரீப் உடலை மீட்டனா். செங்கம் போலீஸாா் ஹாரீப் உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதிதாசன் பிறந்த தின பேச்சரங்கம்

கோயில் திருவிழாக்களால் களைகட்டிய மேலப்பாளையம் சந்தை

குறிஞ்சிப்பாட்டின் 99 பூக்களை ஓவியமாக்கிய மாணவி!

அமைச்சா்கள், ஓபிஎஸ்-ஸுக்கு எதிரான மறு ஆய்வு வழக்கு ஒத்திவைப்பு

திருச்செந்தூா் சந்நிதி தெருவில் கழிவு நீா்: பக்தா்கள் அவதி

SCROLL FOR NEXT