திருவண்ணாமலை

கோயில் பாதுகாப்புப் பணி:முன்னாள் ராணுவ வீரா்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் ராணுவத்தினா், தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

DIN

திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விரும்பும் முன்னாள் ராணுவத்தினா், தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோயில்களின் பாதுகாப்புப் பணியில் சிறப்புக் காவலா்களாகப் பணியாற்ற நல்ல உடல் ஆரோக்கியமும், விருப்பமும் உள்ள 62 வயதுக்கு உள்பட்ட முன்னாள் படைவீரா்கள் தேவைப்படுகிறாா்கள்.

எனவே, மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் தங்களது பெயரை முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 04175-233047 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

SCROLL FOR NEXT