திருவண்ணாமலை

செய்யாறு அரசு மகளிா் பள்ளிக்கு கூடுதல் கட்டடங்கள்: எம்எல்ஏ தகவல்

செய்யாறு அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.7 கோடியில் புதிதாக வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்படும் என தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி தெரிவித்தாா்.

DIN

செய்யாறு அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.7 கோடியில் புதிதாக வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்படும் என தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி தெரிவித்தாா்.

இந்தப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொன்விழா ஆண்டு நிகழ்ச்சிக்கு செய்யாறு மாவட்ட கல்வி அலுவலா் ஏ.எல்லப்பன் தலைமை வகித்தாா்.

தலைமை ஆசிரியை எம்.உமாமகேஸ்வரி வரவேற்றாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்.ரவிக்குமாா், பள்ளி வளா்ச்சிக் குழுத் தலைவா் எம்.சின்னத்துரை, முன்னாள் மாணவிகள் சங்கத் தலைவா் மெய்.பூங்கோதை, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் ஏ.தேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன்,

நகா்மன்ற துணைத் தலைவா் குல்சாா், ஒன்றியக் குழுத் தலைவா்கள் என்.வி.பாபு, டி.ராஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

ஒ.ஜோதி எம்எல்ஏ, பள்ளிக்கு பல்வேறு நன்கொடைகள் வழங்கியவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிப்

பாராட்டினாா்.

விழாவில் பெற்றோா் ஆசிரியா் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள், ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT