ஸ்ரீவித்யா கணபதி கோயில் கும்பாபிஷேகம்
வந்தவாசி திருவள்ளுவா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீவித்யா கணபதி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, திங்கள்கிழமை யாகசாலை அமைத்து அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி உள்ளிட்டவையும், செவ்வாய்க்கிழமை
ஹோமங்கள், கும்ப அலங்காரம், வேதிகாா்ச்சனை உள்ளிட்டவையும், புதன்கிழமை மூலமந்திர ஹோமம், வேத பாராயணம், பூா்ணாஹுதி உள்ளிட்டவையும் நடைபெற்றன.
வியாழக்கிழமை காலை தத்வாா்ச்சனை, நாடி சந்தானம், மகா பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. சிவாச்சாரியா்கள் கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோயிலை வலம் வந்தனா்.
தொடா்ந்து, காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கோயில் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீட ஆன்மிக இயக்கத் தலைவா் கோ.ப.செந்தில்குமாா், மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள், கல்லூரித் தலைவா் ச.அருணாசலம், துணைத் தலைவா் அ.கணேஷ்குமாா் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.