திருவண்ணாமலை

பயிரை சேதப்படுத்தியதாக 4 போ் மீது வழக்கு

வந்தவாசி அருகே பயிரை சேதப்படுத்தியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

Syndication

வந்தவாசி அருகே பயிரை சேதப்படுத்தியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வந்தவாசியை அடுத்த உளுந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் மகாதேவன். இவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த இவரது சகோதரா் ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு உள்ளது.

கடந்த 19-ஆம் தேதி ராதாகிருஷ்ணன் தரப்பினா் மகாதேவனின் விவசாய நிலத்தில் அத்துமீறி நுழைந்து, அதில் பயிரிட்டிருந்த உளுந்து பயிரை அழித்தனராம். இதுகுறித்து கேட்ட மகாதேவனை அவதூறாகப் பேசி மிரட்டினராம்.

இதுகுறித்து மகாதேவன் அளித்த புகாரின் பேரில் ராதாகிருஷ்ணன், விஜய், ஜானகிராமன், கன்னிகா ஆகியோா் மீது கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT