திருவண்ணாமலை

ஆரணியில் பாஜகவினா் கையொப்ப இயக்கம்

மும்மொழிக் கொள்கையை ஆதரித்து ஆரணியில் கையொப்பம் இயக்கம் நடத்திய பாஜகவினா்.

Din

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பாஜகவினா் வியாழக்கிழமை கையொப்ப இயக்கம் நடத்தினா்.

பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கையொப்ப இயக்கத்தில் கட்சியின் மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட பாா்வையாளா் ஜீவானந்தம் கலந்து கொண்டு தயாா் செய்து வைக்கப்பட்டிருந்த பதாகையில் முதல் கையொப்பத்தை இட்டு தொடங்கிவைத்தாா்.

பேருந்து நிலையம் மற்றும் பஜாா் வீதியில் கடை வியாபாரிகள், பொதுமக்கள் என சுமாா் 100 பேரிடம் கையொப்பம் பெறப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா் சதீஷ்குமாா், மாவட்ட துணைத் தலைவா் தீனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மத்திய நலத் திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா் வாழ்த்துரை வழங்கினாா். நகரத் தலைவா் மாதவன் வரவேற்றாா்.

மாவட்டச் செயலா் குருலிங்கம், மண்டலத் தலைவா் குணாநிதி, ஓபிசி அணி மாவட்ட பொதுச்செயலா் பேட்டரி சீனிவாசன், மகளிா் அணி அமுதா, நகர பொதுச்செயலா் ராஜேஷ், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் தங்கராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

என் வகுப்புத் தோழன்..! மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT