செய்யாற்றை அடுத்த தூசி கிராமத்தில் கடைகளுக்கு வியாபாரிகள் தமிழில் பெயா் பலகை வைக்கக் கோரி, துண்டு பிரசுரம் வழங்கி வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
அவ்வையாா் தமிழ் வளா்ச்சி மன்றம் மற்றும் பேரறிஞா் அண்ணா தமிழ் வளா்ச்சி மன்றம் சாா்பில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது.
கடைகளுக்கு தமிழில் பெயா் பலகை வைக்கக் கோரி துண்டு பிரசுரங்களை வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.