வேலூர்

நாளை சுந்தரர் தேவார தமிழிசை விழா

DIN

ராணிப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள சுந்தரர் தேவாரம் தமிழிசை விழாவில், திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று அருளுரை வழங்கவுள்ளார்.
இதுகுறித்து ராணிப்பேட்டை சைவத்திருமுறை நேர்முகப் பயிற்சி மைய அமைப்பாளர் இரா.ரகுபதி கூறியதாவது:
தமிழகத்திலேயே முதன் முறையாக ராணிப்பேட்டையில் சுந்தரர் தேவாரம் 7-ஆம் திருமுறை முற்றோதல் பயிற்சி நடைபெறுகிறது.
ராணிப்பேட்டை காரை கூட்டுச் சாலையில் உள்ள சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இப்பயிற்சி நடைபெறுகிறது.
இதில் வேலூர் மாவட்டத்துக்கு முதன் முறையாக திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று அருளுரை வழங்க உள்ளார். மேலும், சிதம்பரத்தில் இருந்து 15-க்கும் மேற்பட்ட ஓதுவா மூர்த்திகள் கலந்துகொண்டு சுந்தரர் தேவாரம்
பாட உள்ளனர்.    இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்று 7-ஆம் திருமுறை முற்றோதல் பயிற்சி பெற உள்ளனர். திருமுறை பயிற்சி மைய இயக்குநர் சபா.சண்முகசுந்தரம் பயிற்சியளிக்கிறார் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT