வேலூர்

கிணற்றில் கால் தவறி விழுந்த இளைஞர் சாவு

DIN

வந்தவாசி அருகே கிணற்றில் கால் தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
வந்தவாசியை அடுத்த பொன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி மகன் கார்த்திகேயன் (20). இவர், ஞாயிற்றுக்கிழமை தனது வயலுக்கு நடந்து சென்றார்.
அப்போது, சாலையிலிருந்த கல் தடுக்கியதில் அவர் கால் தவறி சாலையோரமிருந்த விவசாயக் கிணற்றில் விழுந்தார். இதில், கார்த்திகேயன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
தகவலறிந்த வந்தவாசி தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று கார்த்திகேயன் உடலை மீட்டனர். இதுகுறித்து செல்வமணி அளித்த புகாரின் பேரில், பொன்னூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT